Add parallel Print Page Options

இஸ்ரவேலரை மோசே கணக்கிடுதல்

ஆசரிப்புக் கூடாரத்திலே கர்த்தர் மோசேயிடம் பேசினார். இது சீனாய் பாலைவனத்தில் நடந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தை விட்டுப் புறப்பட்ட இரண்டாவது ஆண்டின் இரண்டாம் மாதத்தின் முதல் நாளில் இது நடந்தது. கர்த்தர் மோசேயிடம், “இஸ்ரவேல் ஜனங்கள் தொகையை கணக்கிடு. ஒவ்வொரு மனிதனையும் அவனது குடும்பத்தோடும் கோத்திரங்களோடும் பட்டியலிடு. இஸ்ரவேல் ஜனங்களில் இருபது வயது அல்லது அதற்கு மேலுள்ள எல்லா ஆண்களையும் நீயும் ஆரோனும் எண்ணிக் கணக்கிடுங்கள். (இந்த ஆண்கள்தான் இஸ்ரவேல் படையில் பணிபுரிய வேண்டும்.) இவர்களை குழுவின்படி கணக்கிடுக. ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒவ்வொரு மனிதன் உங்களுக்கு உதவுவான். அவனே அந்தக் கோத்திரத்துக்குத் தலைவனாக இருப்பான். உங்களுக்குத் துணையாக நின்று உங்களுக்கு உதவி செய்பவர்களின் பெயர்கள் பின்வருவதாகும்.

ரூபனின் கோத்திரத்திலிருந்து சேதேயூருடைய குமாரன் எலிசூர்;

சிமியோனின் கோத்திரத்திலிருந்து சூரிஷதாயின் குமாரன் செலூமியேல்;

யூதாவின் கோத்திரத்திலிருந்து அம்மினதாபின் குமாரன் நகசோன்;

இசக்காரின் கோத்திரத்திலிருந்து சூவாரின் குமாரன் நெதனெயேல்;

செபுலோனின் கோத்திரத்திலிருந்து ஏலோனின் குமாரன் எலியாப்;

10 யோசேப்பின் சந்ததியிலிருந்து யோசேப்பின்

குமாரனான எப்பிராயீமின் கோத்திரத்திலிருந்து அம்மியூதின் குமாரன் எலிஷாமா;

யோசேப்பின் குமாரனான மனாசேயின் கோத்திரத்திலிருந்து பெதாசூரின் குமாரன் கமாலியேல்;

11 பென்யமீனின் கோத்திரத்திலிருந்து கீதெயோனின் குமாரன் அபீதான்;

12 தாணின் கோத்திரத்திலிருந்து அம்மிஷதாயின் குமாரன் அகியேசேர்;

13 ஆசேரின் கோத்திரத்திலிருந்து ஓகிரானின் குமாரன் பாகியேல்

14 காத்தின் கோத்திரத்திலிருந்து தேகுவேலின் குமாரன் எலியாசாப்;

15 நப்தலியின் கோத்திரத்திலிருந்து ஏனானின் குமாரன் அகீரா” என்று கூறினார்.

16 இவர்கள் அனைவரும் தங்களுடைய கோத்திரங்களுக்கு தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Read full chapter